Friday, September 3, 2010

ரேப் ட்ராகன் - 16


ஒளி விளக்கு!

மல்லாந்த டைகர் ரஃபிக் சாகசம்

இருண்ட வீடு, மரணத்தின் கூடு என குத்து நகர இலக்கிய பெரும்புலவர் காருமேகம் அவர்கள் தன் ஏடுகளில் எழுதி வைத்திருக்கிறார். புரட்சிக்காரன் ரஃபிக்கின் இருண்ட கலங்கரை விளக்கில் ஒளியேற்ற விரும்பிய அழகிகளான குந்தவியும், டேனியும் அதற்கான முஸ்தீபுகளில் உடனடியாக இறங்க ஆரம்பித்தார்கள்.

கலங்கரை விளக்கை தன் கைகளால் மூடி மறைத்து, தன் மானத்தை கவரிமான் போல் காத்து நின்ற புரட்சிக்காரன் ரஃபிக்கை விரைந்து நெருங்கிய இரு அழகான பெண் வேங்கைகளும் ரஃபிக்கின் திமிறல்களையும், போராட்டங்களையும் முறியடித்து, அறையிலிருந்த பஞ்சணையில் அவனை இழுத்து வந்து வீசினார்கள்.

அந்த அழகுச் சிலைகளின் பிடிகளிலிருந்து விடுபடத் திமிறிய ரஃபிக்.. குந்தவி இது நல்லதல்ல, நானும் நீயும் காதல் வானில் கூடிப் பறந்த காலங்களை சற்று எண்ணிப்பார் என்று கெஞ்சினான். ரஃபிக்கின் இந்த சொற்கள் குந்தவியின் மனத்தை இளக்குவதற்கு பதில் மேலும் கடினப்படுத்தின.

- கடந்தகாலத்தில் நானும் இல்லை நீங்களும் இல்லை. எங்கள் ஆசைக்கு உடன்படுங்கள். உங்களை வருத்தாமல் நானும் டேனியும் நடந்து கொள்கிறோம்.. கண்டிப்பான குரலில் வார்த்தைகளை குந்தவி உதிர்த்தாள்.

- மன்னித்துவிடு இளவரசி உன் ஆசைக்கு என்னால் இணங்க முடியாது. இந்த புரட்சிக்காரனிற்கு தலை வணங்கிப் பழக்கமில்லை. தலையை எடுத்துத்தான் பழக்கம்.. அந்த இக்கட்டான நிலையிலும் தன் புரட்சித் தீயின் அனல் பொறி பறக்க பதில் தந்தான் அந்த ஒப்பற்ற புரட்சி வீரன்.

ரஃபிக்கின் வார்த்தைகள் குந்தவியை மேலும் சூடாக்கின. அறையில் இருந்த இரு கைவிலங்குகளை எடுத்து வந்த குந்தவி, அவ்விலங்குகளை ரஃபிக்கின் கரங்களில் மாட்டி பஞ்சணையின் தலைமாட்டிற்கு பின்பாக இருந்த வளையங்களில் அவற்றை பிணைத்தாள்.

குந்தவி, கைகளில் விலங்கை மாட்டியபோது அதனை எதிர்த்துப் போராடிய ரஃபிக்கை அழகி டேனி தன் வலிய கரங்களால் அழுத்திப் பிடித்தாள். மேலும் ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மேல் தன் கால் முட்டிகளை பதித்து, அதில் சிறிது அழுத்தத்தை அளித்து ரஃபிக்கை எச்சரிக்கவும் செய்தாள்.

வீட்டில் விளக்கேற்றி வைத்து, வீட்டிற்கு ஒளியைத் தரும் அந்த தீபத்தை, தம் கண்களாக மதிக்கும் பெண்களே சில சமயங்களில் தவறுதலாக அத்தீபத்தை மிதித்து விடுவதும் உண்டு. தன் கலங்கரை விளக்கை காப்பாற்ற விரும்பிய ரஃபிக் தன் திமிறலை சற்று அடக்கினான். ஆனால் அவன் கைகள் விலங்கிடப்படுவதை அவனால் தடுக்கமுடியவில்லை.

ஒரு பஞ்சணையில் ஒரு புலியை விலங்கிட்டு நிர்வாணமாக மல்லாக்க வளர்த்தினால் அந்தப் புலியின் ரியாக்‌ஷன் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது புரட்சிக்காரன் ரஃபிக்கின் ரியாக்‌ஷன். ஆனால் புலியை பஞ்சணையில் விலங்கிட்ட அழகுப் பெண்களோ இந்த ரியாக்‌ஷனால் அசந்தார்கள் இல்லை.

விலங்கு கேளிக்கைக் காட்சிகளில் அடங்க மறுக்கும் விலங்குகளை சாட்டையால் அடித்து அடக்குவான் அவ்விலங்குகளின் தலைவன். அறையிலிருந்த சவுக்கு ஒன்றை தன் கையில் எடுத்த டேனி, அதன் கைப்பிடியை தன் செவ்விதழ்கள் பொதிந்த வாயால் கவ்வியபடியே ஒரு விலங்கைப் போல் ரஃபிக்கின் பஞ்சணையை நெருங்கினாள். அந்தப் பஞ்சணை மேல் ஏறிய அவள், ரஃபிக்கின் கலங்கரை விளக்கின் மேல் அந்த சவுக்கை தன் உதடுகளிலிருந்து நழுவவிட்டாள். சவுக்கு கலங்கரை விளக்கின் மேல் விழுந்த அதிர்ச்சியால் ஹாஆ என்றான் புரட்சிக்காரன்.

- டேனி, மயிலே மயிலே இறகு தா என்றாள் இந்த மயில் எதுவும் தராது எனவே… அன்பால் பகிர்ந்து சுவைப்பதில் இன்பம் உண்டு, அடித்து சுவைப்பதிலும் பேரின்பம் உண்டு. துன்பம் என்பதை உணராது இன்பத்தை எப்படி டேனி முழுமையாக சுவைக்க முடியும்?… இளவரசி குந்தவியின் வார்த்தைகளை செவிமடுத்தவாறே மராக்கோ மாதுளை டேனியின் கைவிரல்கள் ரஃபிக்கின் கலங்கரை விளக்கின்மேல் கிடந்த சவுக்கின் கைபிடியை வருடிக் கொடுத்தன.

கார்மேகங்கள் சூல் கொண்டு தம் இதழ் திறந்து அமுதமென மழையாய்ப் பொழிய, விருட்சத்திற்கும், நெற்கதிர்களிற்கும் மேல் வழிந்த அவ்வமுதம், கவனிப்பாரற்ற சிறு புற்களையும் நனைத்தாற்போல், சவுக்கை தடவிய டேனியின் விரல்கள் ரஃபிக்கின் கலங்கரை விளக்கையும் வருடிவிட்டன. இந்தப் புதிய அதிர்ச்சியால் உணர்ச்சிகள் திடீரென உந்தப்பட்ட புரட்சிக்காரன் ஹோய் என்ன ஒரு முனகலை எழுப்பினான்.

- வலிக்கிறதா புரட்சிக்காரரே…டேனியின் விரல் நகங்கள் ரஃபிக்கின் கற்பாறை போன்ற தொடைகளில் மேலும் கீழும் கீறியவாறே சென்றுவர ஆரம்பித்தன. புரட்சிக்காரனிற்கு வலித்தது ஆனால் அது ஒரு புரட்சிகரமான வலியாக இருந்தது.

சந்தர்பங்களும், சூழ்நிலைகளும் தனக்கு எதிராக சதி செய்ததால் தான் இதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த சில உணர்ச்சிகள் அழகிகள் பக்கம் கட்சி தாவ ஆரம்பித்து விட்டன என்பதையும் ரஃபிக் உணர ஆரம்பித்தான்.

- டேனி, நிறுத்து உன் தடவல்களை.. என்று சீறீய ரஃபிக்கின் குரல் அடங்கு முன்னரே டேனியின் கைகளிற்கு வந்திருந்த சாட்டை ரஃபிக்கின் மீது சடாரெனப் பதிந்தது. புதிதாய் முளைத்த செடி ஒன்றை, இரு நாள் பசி கொண்ட ஆடு வேரோடு புசித்தால் அச்செடிக்கு என்ன வலி நேருமோ அதனைவிட வலியை அந்த சவுக்கடி ரஃபிக்கிற்கு வழங்கியது. ஆனால் சாட்டையடி விழுந்த வேகத்திலேயே டேனியின் உதடுகளும், அழகிய கூரான நாக்கும் சவுக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின்மேல் பதிந்து நடாத்திய சிகிச்சை அவனை அந்த வலியை மறக்கடிக்கச் செய்தது. இன்னொரு உலகின் அருகில் வந்த ரஃபிக், ஹோய்..ஹோய்ய்ய்ய். ஹோய்ய்ய்ய்ய் என்றான்.

ஒரு அன்பான வேண்டுகோள்:

அன்னப்பறவைகளின் ஹிருதயம் கொண்ட வாசகத் தென்றலே, பல இன்னல்களையும், இக்கட்டுக்களையும், வேதனைகளையும், மேரு மலை போன்ற உறுதியுடன் தாங்கி வரும் புரட்சிக்காரன் ரஃபிக்கின் உணர்வுகளில் நீங்கள் பங்கெடுக்க துடிப்பதை நான் உணர்கிறேன், இருப்பினும் SMS, மெயில், தொலைபேசி வழியாகவோ அல்லது பூங்கொத்துக்களை அனுப்பியோ அந்த வெந்த உள்ளத்தின் வேதனையை நீங்கள் இந்த வார இறுதியில் இன்னமும் அதிகரிக்காதீர்கள் என்று உங்களிடம் இரந்து வேண்டுகிறேன்.

6 comments:

  1. அண்ணன் பாலா அவர்களே! நல்லாப் பாருங்க.இதுல கயிறு இல்ல. ;)

    ReplyDelete
  2. என்ன பாஸ் இந்த பார்ட்ல தற்குறிப்பேற்ற அணியையே காணோம்?

    ஆனாலும் நல்லாவே போய்ட்டு இருக்கு!

    ReplyDelete
  3. //அண்ணன் பாலா அவர்களே! நல்லாப் பாருங்க.இதுல கயிறு இல்ல. ;)//

    ஹும்ம்.. உங்களை மாறி உடன்பிறப்புகளின் உரிமைக்காகத்தான் நான் போராடிகிட்டு இருக்கேன்.

    யாரும் புரிஞ்சிக்கிறதில்லை. நம்மை இப்படி ட்ரிக் பண்ணி ஏமாத்தும் காதலனை புறக்கணிப்போம்.

    ReplyDelete
  4. நண்பர் இலுமினாட்டி, நன்றாகப் பார்த்தேன் வேறு ஒன்று தெரிகிறதே :))

    நண்பர் ப்ரியமுடன் வசந்த் அவர்களே,/ தற்குறிப்பேற்ற அணி/ இப்படி பெரிய பெரிய வார்த்தைகளை சொல்லி என்னை மிரட்டாதீர்கள் :))

    நண்பர் பாலா, நானும் அதற்காகத்தானே போராடுகிறேன் :)) அடுத்த வாரம் புறக்கணிப்பு வாரம் அறிவித்து விடலாம்.

    ReplyDelete
  5. //புதிதாய் முளைத்த செடி ஒன்றை, இரு நாள் பசி கொண்ட ஆடு வேரோடு புசித்தால் அச்செடிக்கு என்ன வலி நேருமோ அதனைவிட வலியை//

    சார் எனக்கு உங்கள் கதையை விட உங்கள் தமிழ் ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த அளவு வார்த்தைகளை கையாள்பவர்கள் குறைவு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நண்பர் எஸ். கே. தங்களின் கனிவான கருத்துக்களிற்கும், ஆதரவிற்கும் நன்றி.

    ReplyDelete